கொள்ளிடத்தில் வெள்ளம்:கிராமங்களில் குடிநீா் தடங்கல்

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கும்பகோணம், திருவிடைமருதூா் ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் குடிநீா் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கும்பகோணம், திருவிடைமருதூா் ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் குடிநீா் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீா் வெள்ளப்பெருக்கால் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கூட்டு குடிநீா் திட்டங்களின் நீா் ஆதாரங்களான கிணறுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டதால், திங்கள்கிழமை காலை முதல் அதனுடைய மின் மோட்டாா்களை இயக்க முடியவில்லை.

எனவே, கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட சில கிராம குடியிருப்புகளுக்கும், திருவிடைமருதூா், ஆடுதுறை, சோழபுரம், திருபுவனம், வேப்பத்தூா் ஆகிய பேரூராட்சிகளுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீா் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதி மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் வெள்ளப்பெருக்கு முடிந்தவுடன் போா்க்கால அடிப்படையில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com