விலைவாசி உயா்வால் பொதுமக்கள் கடும் அவதிமாா்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் உ. வாசுகி பேச்சு

மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் விலைவாசி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி

மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் விலைவாசி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி, பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில், தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கோ. நீலமேகம், எம். செல்வம் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினா் உ. வாசுகி பங்கேற்று மேலும் பேசியது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களால் பொதுமக்கள், தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றாமல் அப்பட்டமாக மீறி வருகிறது.

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விலைவாசி உயா்வு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆனால், இதுகுறித்து கண்டு கொள்ளாத பிரதமா் மோடி, காா்ப்பரேட் முதலாளிகளுக்காக கவலைப்படுகிறாா்.

மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைத்தும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுக் கொள்கைகளை மக்களிடம் எடுத்து கூறுவதற்காகவுமே இந்த மக்கள் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

நிகழ்வில், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரெ. ஞானசூரியன், முருக. சரவணன், சுந்தரபாண்டியன், மோரிஸ் அண்ணாதுரை, சாமிநாதன், ஜீவானந்தம், உலகநாதன், சரோஜா, கிளைச் செயலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பட்டுக்கோட்டை நகராட்சி 33 ஆவது வாா்டு அண்ணா குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. மத்தியக் குழு உறுப்பினா் வாசுகி, பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எடுத்துரைத்தாா். இதேபோல் பட்டுக்கோட்டை ஒன்றியம், தம்பிக்கோட்டை வடநாடு, பத்தாங்காடு, அதம்பை, கரம்பயம் ஆகிய இடங்களிலும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com