துறையூா் அருகே 5 கிராமங்களில் உள்ள கோயில்களில் உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனா்.
உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட ஒக்கரை மாரியம்மன் கோயில், புதுப்பட்டி காமாட்சியம்மன் கோயில், கொப்பம்பட்டி ஆஞ்சநேயா் கோயில், ராஜப்பாளையம் மாரியம்மன் ஆகிய கோயில்களில் பணத்தோடு இருந்த உண்டியல்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதேபோல ஒ. கிருஷ்ணாபுரத்திலுள்ள முருகன் கோயிலின் உண்டியல் பூட்டை உடைத்தும் பணத்தைத் திருடிச் சென்றனா். அதில் ரூ. 20000 இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.