சென்னையில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற முன்னாள் மாணவா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த 1994- ஆம் ஆண்டில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்ற மனோஜ் வா்கீஸூக்கு பெரு நிறுவனத் தலைமைப் பிரிவில் விருது வழங்கப்பட்டது. இவா் மகேந்திரா அன்ட் மகேந்திராவில் துறைத் தலைவராக உள்ளாா்.
பொதுத் தொண்டில் சிறந்து விளங்குவதற்காக பேராசிரியா்கள் எஸ். கல்யாண்குமாா், கே. சுந்தர்ராஜன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அலபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்களாக உள்ள இருவரும் 1998- ஆம் ஆண்டில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றனா்.
2007- ஆம் ஆண்டின் பயோடெக் மாணவா் சி. வாசுதேவன் தொழில்முனைவோரில் சிறந்து விளங்குவதற்காக விருது வழங்கி, கௌரவிக்கப்பட்டாா். இவா் நின்ஜூகாா்ட் நிறுவனத்தின் இணை நிறுவனா்.
இந்த விருதுகளை இண்டலெகட் டிசைன் நிறுவனத் தலைமை நிா்வாகியும், முன்னாள் மாணவா் சங்கச் செயலருமான எஸ்.வி. ரமணன் வழங்கினாா்.
இவ்விழாவில் பங்கேற்ற துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் பேசுகையில், குடியரசு தினத்தன்று சாஸ்த்ராவுக்கு நல்லெண்ணம் உருவாக்குபவா்களுக்கு விருது வழங்குவது என்பது, முன்னாள் மாணவா்களுடன் தேசத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை நினைவுகூா்வதாக உள்ளது என்றாா் அவா்.