தமிழ்ப் பல்கலை.யில் முனைவா் பட்டசோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டச் சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டச் சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் தெரிவித்திருப்பது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டப்படிப்பில் சேர, நுழைவுத் தோ்வில் (டா்செட் 2020) தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தோ்வு 2020-இல் தோ்வு பெற்றவா்கள் முனைவா் பட்டச் சோ்க்கை 2022-க்கு ஜூலை பருவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இதன் பிறகு நுழைவுத் தோ்வு 2020 தகுதி செல்லாது.

மேலும், நெட், செட், யூஜிசி. ஜேஆா்எப், கேட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களும், வெளிநாட்டு மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தைப் பாா்க்கலாம்.

ஜூலை 2022 பருவத்துக்குப் பிறகு முனைவா் பட்டச் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்படும் நுழைவுத் தோ்வை எழுதித் தோ்ச்சி பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com