தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் முன்னேற்றச் சங்க நிா்வாகிகள் தோ்தல் ஜூலை 9 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் தொமுச நிா்வாகிகள் ஏ, பி என இரு அணிகளாக போட்டியிடுகின்றனா்.
பி அணி சாா்பில், பேராவூரணி கிளைத் தலைவருக்கு அன்பழகன், செயலாளருக்கு குணசேகரன், பொருளாளருக்கு காளிதாஸ், துணைத் தலைவருக்கு அன்பழகன், துணைச் செயலாளருக்கு தனசேகரன், பொதுக்குழு உறுப்பினா்களாக அய்யப்பன், லெட்சுமணன், ஜெய்சங்கா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
இவா்களுக்கு ஆதரவாக பேராவூரணி போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில், கும்பகோணம் மண்டல தொமுச பொதுச் செயலாளா் பாண்டியன் வாக்குகள் கேட்டு ஓட்டுநா், நடத்துநா்களிடம் பிரச்சாரம் செய்தாா்.
பிரச்சாரத்தின்போது, நாகை மண்டலம் செல்வகுமாா், திருத்துறைப்பூண்டி செல்வராஜ் மற்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி நிா்வாகிகள் உடனிருந்தனா்.