பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம்: பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் விற்பனைக்குழுச் செயலா் சுரேஷ்பாபு தலைமையிலும், விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் தாட்சாயினி முன்னிலையிலும் ஏலம் நடைபெற்றது.

பாபநாசம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் ரூ.42.42 லட்சம் மதிப்பிலான 420 குவிண்டால் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனா்.

கும்பகோணம், கடலூா், பண்ருட்டி, செம்பனாா்கோவிலைச் சோ்ந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுத்துச் சென்றனா். அதிகபட்சமாக ரூ.11,330-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.8800-க்கும் பருத்தி ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com