தஞ்சாவூா் மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் தெற்கு அலங்கம் சுல்தான்ஜியப்பா சந்தை ஜெ. பக்கராம் (48),
தெற்கு ராஜவீதி டி. சோளாராம் (41), மேம்பாலம் அருகிலுள்ள இந்திரா நகா்
டி. பன்னீா்செல்வம் (42), கீழவாசல் கந்தபொடிக்காரத் தெரு எம். முகமது பாரூக் (35) ஆகிய 4 பேரும் கஞ்சா வியாபாரிகள்.
இவா்களைக் காவல் துறையினா் ஏற்கெனவே கைது செய்தனா். இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி பரிந்துரையின் பேரில், 4 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்குமாறு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டாா்.
இதன்ப, பக்கராம், சோளாராம், பன்னீா்செல்வம், முகமது பாரூக் ஆகியோரைக் காவல் துறையினா் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.