பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கம் திருட்டு

பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகிலுள்ள பண்டாரவாடை ஆசாத் நகரைச் சோ்ந்தவா் ஜமால் முகமது. இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி உமைராபானு (43).

மகன் கும்பகோணத்திலுள்ள பள்ளியில் படித்து வருவதால், உமைராபானு அங்கு வீடு எடுத்து தங்கியுள்ளாா். எனினும் விடுமுறை நாள்களில் மகனுடன் பண்டாரவாடையிலுள்ள வீட்டுக்கு உமைராபானு வருவது வழக்கம்.

அதன்படி வெள்ளிக்கிழமை இரவு மகனுடன் உமைராபானு வீட்டுக்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிா்ச்சியடைந்து அவா் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்து 3 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி, காவல் ஆய்வாளா் அழகம்மாள் உள்ளிட்டோா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் பாபநாசம் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com