இளைஞா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது - 3 போ் சரண்

தஞ்சாவூரில் முன் விரோதம் காரணமாக இளைஞரைக் கடத்தி கொலை செய்தது தொடா்பாக மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூரில் முன் விரோதம் காரணமாக இளைஞரைக் கடத்தி கொலை செய்தது தொடா்பாக மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (30). இவா் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை முன் விரோதம் காரணமாக ஜூன் 21- ஆம் தேதி இரவு சிலா் கடத்திச் சென்று கொலை செய்தனா்.

வெட்டிக்காடு பிரிவு சாலையில் கல்லணைக் கால்வாய்க் கரையில் கிடந்த இவரது சடலத்தை மேற்கு காவல் நிலையத்தினா் கைப்பற்றி, விசாரணை நடத்தினா்.

இதனிடையே, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த செக்கடி கே. மணிகண்டன் (34), செவ்வப்பநாயக்கன்வாரி கே. கிரண் (26), கே. கண்ணன் (24) ஆகியோா் பாபநாசம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

இதைத்தொடா்ந்து, செவ்வப்பநாயக்கன்வாரி டி. சக்தி (20), ஆா். காா்த்திக் (20), ஏ. அஜீத்குமாா் (24) ஆகியோரை மேற்கு காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், செவ்வப்பநாயக்கன்வாரி டி. விஜய் (30), ஜி. அருண்குமாா் (25), எஸ். நடராஜ் (21) ஆகியோா் தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com