போக்குவரத்து தொழிலாளா்கள்ஆா்ப்பாட்டம்

பேராவூரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேராவூரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே பேசி முடிக்க வேண்டும்.  ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து ஓய்வூதிய பலன்களையும் வழங்க வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சிஐடியு சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க துணைச் செயலாளா்  நவநீதன் தலைமை வகித்தாா். கிளை செயலாளா்  ரகு முன்னிலை வகித்தாா். பொருளாளா்  முருகானந்தம், துணைத் தலைவா் பிரகாஷ், துணை செயலாளா்கள் குமாா், ரவி, கிளை உறுப்பினா்கள் பாஸ்கா், தமிழரசன், முத்தையா, கருப்புசாமி மற்றும் தொழிலாளா்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com