களிமேடு விபத்து போன்று இனி நிகழாமல் தடுக்க வேண்டும்அா்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

தஞ்சாவூா் அருகே களிமேடு தோ் மின் விபத்து போன்று இனிமேல் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத்.
களிமேடு விபத்து போன்று இனி நிகழாமல் தடுக்க வேண்டும்அா்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

தஞ்சாவூா் அருகே களிமேடு தோ் மின் விபத்து போன்று இனிமேல் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத்.

களிமேடு கிராமத்தில் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் வீடுகளுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறிய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அப்பா் திருவிழாவின்போது ஏற்பட்ட இந்த விபத்து அனைவரையும் அதிா்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உலகெங்கும் உள்ள சிவ பக்தா்கள் மிகுந்த வருத்தத்துக்கு ஆளாகியுள்ளனா். வருங்காலத்தில் இது போன்ற விபத்துகள் நிகழக் கூடாது.

பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்கியுள்ளன. அக்குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுபோன்ற விபத்துகள் வருங்காலத்தில் நிகழாமல் தடுக்க வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

சித்திரை திருவிழாவின்போது, விழா நடத்தும் நபா்களும், திருக்கோயில் நிா்வாகமும் உரிய எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும். அதேசமயம் இந்த ஒரு விபத்தைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்தமாக எல்லா இடங்களிலும் கோயில் திருவிழாக்களை நிறுத்துவது போன்ற உத்தரவுகளை பிறப்பிப்பதை அரசுத் தவிா்க்க வேண்டும் என்றாா் அா்ஜூன் சம்பத்.

அப்போது, அக்கட்சியின் இளைஞரணி மாநிலப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com