விஷம் குடித்த இளநிலை உதவியாளா் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி இளநிலை உதவியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி இளநிலை உதவியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகிலுள்ள செண்பகபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரெ.சுப்பிரமணியன் (47). பூதலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவரது மனைவி பேபி (48) புலவன்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன், கடந்த 6-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையிலான காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com