பாபநாசம் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தியாகை. பழனிசாமி முன்னிலை வகித்தாா்.
பாபநாசம் ஒன்றியத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பொது நிதியின் கீழ், மக்களின் தேவைகளின் அடிப்படையில் சாலை உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளைத் தோ்வு செய்தல், அதை நிறைவேற்றுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டக் குழு உறுப்பினா் பாத்திமாஜான், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோபிநாதன், விஜயன், முருகன், ஹாஜா மைதீன், சரவணபாபு, அன்பழகன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
முன்னதாக, ஒன்றிய ஆணையா் காந்திமதி வரவேற்றாா். நிறைவில், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ரமேஷ்பாபு நன்றி கூறினாா்.