பாபநாசத்தில் சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து பாபநாசம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் கருணாகரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாபநாசம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (நவ. 5) பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும்
பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், திருக்கருகாவூா், ஆவூா், ஏரி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி, சாலபோகம் உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூா் மட்டையான்திடல், வீரமங்கலம், இடையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.