தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.18) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.