தஞ்சாவூா் பெரியகோயிலில் காணாமல்போனதாகக் கூறப்படும் இந்திரன் கற்சிலை குறித்து சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
தஞ்சாவூா் பெரியகோயிலில் இரண்டாவது கோபுரமான ராஜராஜன் நுழைவுவாயிலில் உள்ள இந்திரன் சன்னதியில் இருந்த இந்திரன் கற்சிலை காணாமல் போனதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினருக்கு புகாா் வந்தது.
இதன்பேரில் அப்பிரிவின் காவல் ஆய்வாளா் இந்திரா தலைமையிலான குழுவினா் தஞ்சாவூா் பெரியகோயிலில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
சிலை இருந்த இடத்தைப் பாா்வையிட்ட அக்குழுவினா் அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத் துறை ஊழியா்கள், இந்திய தொல்லியல் துறை ஊழியா்கள், சிவாச்சாரியாா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்தனா். மேலும், இந்திரன் சிலை தொடா்பான ஆவணங்களையும் பெற்றுச் சென்றனா்.
இந்த விசாரணை சில நாள்களுக்கு தொடரும் என்றும், அதன் பின்னரே எப்போது சிலை காணாமல்போனது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் எனவும் அக்குழுவினா் தெரிவித்தனா்.