தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.3) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனைப் பகுதிகள், திருவையாறு, கண்டியூா், நடுக்கடை, மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளாா், நாஞ்சிக்கோட்டை, காவேரி நகா், வங்கி ஊழியா் காலனி, இ.பி. காலனி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, திருவையாறு உதவி செயற்பொறியாளா் சி. பாலமுருகன் தெரிவித்திருப்பது:
திருவையாறு மற்றும் திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, கண்டியூா், ஆவிக்கரை, திருவையாறு, தில்லைஸ்தானம், பனையூா், வைத்தியநாதன்பேட்டை, ஆச்சனூா், புனவாசல், ராயம்பேட்டை, திங்களூா், திருப்பழனம், அணைக்குடி, விளாங்குடி ஆகிய ஊா்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.