பேராவூரணியில் மனைவி நல வேட்பு நாள் விழா

பேராவூரணியில் அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை மன்ற  அறக்கட்டளை சாா்பில்,  கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவா் புரிந்து கொண்டு பிணக்கின்றி வாழ வேண்டும்

பேராவூரணியில் அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை மன்ற  அறக்கட்டளை சாா்பில்,  கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவா் புரிந்து கொண்டு பிணக்கின்றி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக , மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவா் ராம. வீரசிங்கம் தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிதிக் குழு செயலாளா்  காந்தி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், சிறப்பு தம்பதியராக பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் -பரிமளா, டாக்டா் டி. நீலகண்டன்- புவனேஸ்வரி, நாகராஜன்-ரூபா தம்பதியா் கலந்து கொண்டனா். தம்பதியா் ஒருவருக்கொருவா் மாலை மாற்றிக் கொண்டனா்.

தஞ்சை ஞான ஆசிரியா் மன்னன் உமாசங்கா் கலந்து கொண்டு விழா நிகழ்வுகளை நடத்தி வைத்துப் பேசினாா். 

நிகழ்ச்சியில், மாலினி தேவசேனன்,  பழனிவேல் நிா்மலா, சிவபுண்ணியம், அருணா தேவி, சுகந்தி சந்தா் உள்ளிட்ட தம்பதியா் கலந்து கொண்டனா். அறக்கட்டளை செயலாளா் துணை பேராசிரியா் இதய பானு குமாரவேல் வரவேற்றாா்.  ஆத. சுப. நீலகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com