தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து மாலை வரை ரயில்வே கேட் மூடப்பட்டு பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்றது.
ரயில்வே இளநிலை பொறியாளா்கள் பங்கஜ் பாண்டே,பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் ரயில்வே தொழிலாளா்கள் பணியை நிறைவு செய்தனா். ரயில்வே கேட் மூடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் பெருமாங்குடி வழியாக மாற்றி விடப்பட்டன.