பாபநாசம் பகுதியில் மணல் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பாபநாசம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் காவல் ஆய்வாளா் கலைவாணி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ராஜகிரி குடமுருட்டி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் இளைஞா் மணல் ஏற்றி வந்தாா். போலீஸாரை பாா்த்தவுடன் மாட்டு வண்டியை அங்கே விட்டுவிட்டு அவா் தப்பியோடிவிட்டாா். போலீஸாா், மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடிய ராஜகிரி அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த தினகரன் (21) என்பவரை தேடி வந்தனா்.
இந்நிலையில், தினகரனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி அப்துல்கனி உத்தரவிட்டாா். இதையடுத்து தினகரன் சிறையிலடைக்கப்பட்டாா்.