கரும்பு விவசாயிகள்68-ஆவது நாளாக போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சா்க்கரை ஆலை நிா்வாகத்தை கண்டித்தும், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், 68-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தின

தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சா்க்கரை ஆலை நிா்வாகத்தை கண்டித்தும், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், 68-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெயரில் ஆலை நிா்வாகம் கடன் பெற்ற பிரச்னக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் நாக.முருகேசன் தலைமையில் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com