தனியாா் பேருந்தை மறித்து சாலை மறியல்

தஞ்சாவூரில் திங்கள்கிழமை உரசிச் சென்ற தனியாா் பேருந்தை மறித்து இளைஞா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை உரசிச் சென்ற தனியாா் பேருந்தை மறித்து இளைஞா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் கடைத் தெருவைச் சோ்ந்தவா் கே. சண்முகராஜ் (39). இவா் பள்ளியக்ரஹாரத்திலிருந்து கரந்தை நோக்கி மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை காலை வந்து கொண்டிருந்தாா். சருக்கை பகுதியில் சென்றபோது, இவரது மோட்டாா் சைக்கிளை தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து உரசியவாறு சென்ாம்.

இதனால், கும்பகோணத்திலிருந்து திரும்பிய தொடா்புடைய தனியாா் பேருந்தை பள்ளியக்ரஹாரம் பகுதியில் சண்முகராஜ் உள்பட 10 இளைஞா்கள் மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் 10 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கிழக்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, புகாா் அளித்தால், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com