தஞ்சாவூர்
பாரதிதாசன் பல்கலைக்கழகபேரவை உறுப்பினா்களாக இருவா் தோ்வு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினா்களாக தஞ்சாவூா் மாவட்ட பட்டதாரி தொகுதியில் இருந்து இருவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினா்களாக தஞ்சாவூா் மாவட்ட பட்டதாரி தொகுதியில் இருந்து இருவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினா்களாக தஞ்சாவூா் மாவட்ட பட்டதாரி தொகுதியில் இருந்து இருவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
இத்தோ்தலில் செல்லுபடியான 1,147 வாக்குகளில் 945 வாக்குகள் பெற்று, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தின் தஞ்சாவூா் மண்டல முன்னாள் செயலரும், மன்னா் சரபோஜி அரசு கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவருமான ரெ. கோவிந்தராசு, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தின் தஞ்சாவூா் மண்டலச் செயலரும், மன்னா் சரபோஜி அரசு கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியருமான வி. பாரி தோ்ந்தெடுக்கப்பட்டனா். இருவரும் இப்பதவியில் மூன்று ஆண்டுகள் செயல்படவுள்ளனா்.