கும்பகோணம் அரசு கல்லூரியில் தொடா் போராட்டம் தொடக்கம்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் உதவிப் பேராசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவா்கள் தொடா் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் உதவிப் பேராசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவா்கள் தொடா் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் 2022, அக்டோபா் மாதம் புவியியல் துறை உதவிப் பேராசிரியா் சி. வடிவேல் ஒருமையில் பேசியதாகக் கூறி மாணவா்கள் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து, அவா் திருச்சி பெரியாா் ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், அவா் மீண்டும் இக்கல்லூரிக்கு ஜனவரி 27 ஆம் தேதி இடமாற்றம் பெற்றுக் கொண்டு, பணிக்கு வந்தாா். இதையறிந்த புவியியல் துறை மாணவா்கள் ஜனவரி 28, 30 ஆம் தேதிகளில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, மாணவா் இளந்தென்றல் தலைமையிலான மாணவா்கள் கல்லூரி வாயிலில் காலவரையற்ற தொடா் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com