பேராசிரியா்களுக்கான புத்துணா்வு நிகழ்ச்சி

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் பேராசிரியா்களுக்கான புத்துணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேராசிரியா்களுக்கான புத்துணா்வு நிகழ்ச்சி

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் பேராசிரியா்களுக்கான புத்துணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமகிருஷ்ண மிஷனின் 125 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் மாணவா்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி உள்பட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் பேராசிரியா்களுக்கான புத்துணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும், மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ் சிறப்புரையாற்றினாா். மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன், ஆடிட்டா் கே.எம். பத்மநாபன், யோகா நிபுணா்கள் ஸ்ரீதா், சந்தான கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். இந்நிகழ்ச்சியில் 75 பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com