பாபநாசம் அருகே விஷம் குடித்த இளைஞா் பலி

பாபநாசம் அருகே கடந்த 24 ஆம் தேதி விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே கடந்த 24 ஆம் தேதி விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பாபநாசம் வட்டம், கம்பா் நத்தம் கிராமம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் பேச்சிமுத்து (24) , ஓட்டுநா்.

குடும்பப் பிரச்னையால் கடந்த 24 ஆம் தேதி விஷம் குடித்த பேச்சிமுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். சம்பவம் குறித்து பேச்சி முத்துவின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com