தஞ்சாவூரில் மது அருந்தி இருவா் உயிரிழந்ததற்கு சயனைடு காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளரிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்தது:
தஞ்சாவூரில் மதுக் கூடத்தில் மது அருந்தி மீன் வியாபாரி குப்புசாமி, காா் ஓட்டுநா் விவேக் ஆகிய 2 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா். மேலும் 2 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், இருவரது வயிற்றுப் பகுதி, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உடல்பாகங்களின் மாதிரிகள் தஞ்சாவூா் மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அந்த ஆய்வக அறிக்கையில் இருவரது உடல்பாகங்களிலும் மெத்தனால் இல்லை என்பதும், சயனைடு விஷம் இருந்ததும் தெரியவந்தது.
உயிரிழந்த விவேக், அவரது மனைவியை விட்டுப்பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாா். இதுதொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறாா். விசாரணையின் முடிவில் முழு விவரங்களும் தெரியவரும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா். அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உடனிருந்தாா்.