தஞ்சாவூர்
1,751 மதுபாட்டில்கள் பறிமுதல்: 24 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களில் காவல் துறையினா் மேற்கொண்ட மதுவிலக்கு சோதனையில் 1,751 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 24 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் தொடா்புடைய காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் மதுவிலக்கு சோதனை திங்கள், செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதில், 1,751 மது பாட்டில்கள், 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 24 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். இந்த நடவடிக்கை வரும் நாள்களில் மிகத் தீவிரமாக இருக்கும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.