தஞ்சாவூர்
பேராவூரணி தொகுதியில் மாா்க்சிஸ்ட் பிரசாரம்
‘இந்தியா’ கூட்டணி சாா்பில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ச.முரசொலிக்கு வாக்குகேட்டு, மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சாா்பில், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தெருமுனைப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு, திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, துறவிக்காடு, ஒட்டங்காடு, கொன்றைக்காடு, சித்தாதிக்காடு, சொா்ணக்காடு, பேராவூரணி நகா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி நிா்வாகிகள் ஆா்.சி.பழனிவேலு, கோ.நீலமேகம், வழக்குரைஞா் வீ.கருப்பையா உள்ளிட்டோா் பேசினா்.
பேராவூரணி ஒன்றியச் செயலாளா் கொன்றை வே.ரெங்கசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஏ.வி.குமாரசாமி, கோவிந்தராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள், கிளைச் செயலாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.