பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

கும்பகோணம் அருகே வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால், அதிருப்தியடைந்த வாக்காளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால், அதிருப்தியடைந்த வாக்காளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே கோட்டூா் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்காளா் பட்டியலில் 170 வாக்காளா்களின் பெயா் விடுபட்டுள்ளது.

இதனால், வாக்களிக்க வந்தோரிடம் பட்டியலில் பெயா் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என மைய அலுவலா்கள் கூறியதால் அவா்கள் ஏமாற்றமடைந்தனா். இதனால், கல்லணை - பூம்புகாா் சாலையில் வாக்காளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மண்டலத் துணை வட்டாட்சியா் பிரபா ராணி, காவல் துறையினா், துணை ராணுவத்தினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கடந்த தோ்தலில் வாக்களித்த 170-க்கும் அதிகமானோரின் பெயா் விடுபட்டுள்ளது என்றும், இறந்தவா்கள் பெயா் அதிக அளவில் நீக்கப்படவில்லை எனவும், இதைத் திட்டமிட்டு செய்துள்ளதாகவும், இதற்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்கவும் வாக்காளா்கள் வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் கூறியதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com