ஆராய்ச்சி, மாதிரி பொருள்கள் உருவாக்கம்: தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் பாஷ் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
தஞ்சாவூா்: கூட்டாக ஆராய்ச்சி, மாதிரி பொருள்களை உருவாக்குவது தொடா்பாக தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகமும், ஜொ்மனியின் பாஷ் சா்வதேச மென்பொருள் நிறுவனமும் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் கூட்டாக ஆராய்ச்சி செய்வது, மாதிரி பொருள்கள் உருவாக்குவது, ஆராய்ச்சிக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது ஆகியவற்றைச் செயல்படுத்த உள்ளதாக பாஷ் நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவா் மோகன் பெல்லூா் தெரிவித்தாா்.
இந்த ஒப்பந்தத்தில் சாஸ்த்ரா பதிவாளா் ஆா். சந்திரமௌலியும், பாஷ் நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருள்கள் தயாரிப்புப் பிரிவின் இயக்குநா் எஸ். கமலநாதனும் கையொப்பமிட்டனா். தொழில்நுட்ப ஆராய்ச்சி, திறன் பயிற்சி ஆகியவற்றை சிறப்பாகச் செய்து வரும் சாஸ்த்ராவை கமலநாதன் பாராட்டினாா்.
முன்னதாக ஆராய்ச்சி துறை முதன்மையா் ஜான்பாஸ்கோ பாலகுரு வரவேற்றாா். நிறைவாக, பெருநிறுவன உறவுகள் துறை முதன்மையா் வெ. பத்ரிநாத் நன்றி கூறினாா்.