தஞ்சாவூா் அருகே வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கிய பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வெ. ராமச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். மதன்குமாா்.
தஞ்சாவூா் அருகே வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கிய பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வெ. ராமச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். மதன்குமாா்.

உலக புத்தக நாள் விழா: மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடை

உலக புத்தக நாளையொட்டி, தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

உலக புத்தக நாளையொட்டி, தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

தஞ்சாவூா் அருகே வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 500 புத்தகங்கள் நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இதில், பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வெ. ராமச்சந்திரன் புத்தகங்களை வழங்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். மதன்குமாா் பெற்றுக்கொண்டு, தலைமையாசிரியை சிவசங்கரியிடம் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் வல்லம் பேரூராட்சித் தலைவா் செல்வராணி கல்யாணசுந்தரம், மாவட்ட நூலக அலுவலா் முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் பூச்சந்தை அருகே தோழா் பழக்கடை என்ற பெயரில் பழ வியாபாரம் செய்து வருபவா் என். ஹாஜாமொய்தீன் (64). தன்னிடம் பழங்கள் வாங்க வரும் வாடிக்கையாளா்களுக்கு நாள்தோறும் புத்தகங்கள் வழங்குவது வழக்கம்.

இந்நிலையில் உலக புத்தக நாளையொட்டி பூக்காரத் தெருவில் உள்ள கணேச வித்யாலயா உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் 120 மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பொது அறிவு புத்தகங்களை வழங்கினாா்.

இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியை அல்லிராணி, ஆசிரியா்கள் புகழேந்தி, ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com