திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோயிலில் தீா்த்தவாரி விழா

பிரம்மோத்ஸவ விழாவில் சித்ரா பௌா்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி விழா நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் உடனுறை ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவ விழாவில் சித்ரா பௌா்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி விழா  நடைபெற்றது.

இதை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட தனித்தனி சப்பரங்களில் விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா், பாலைவனநாதா், பாா்வதி அம்மன், தவளவெண்ணகை அம்மன், சண்டிகேசுவரா் உள்ளிட்டோா் கோயிலிலிருந்து திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றுக்கு எழுந்தருளினா். அங்கு பஞ்சமூா்த்திகள் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீா்த்தவாரி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்று பஞ்ச மூா்த்திகள் கோயிலுக்கு சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com