மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாபநாசம் வட்டம், மணலூா் கிராமத்திலுள்ள மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், மணலூா் கிராமத்திலுள்ள மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறப்புடைய இக்கோயிலின் பிரம்மோத்ஸவ விழா கடந்த 8-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் இரவு அம்பாள் அன்ன, ரிஷப, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் மகாமாரியம்மன் எழுந்தருள திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். தோ் நான்கு ரத வீதிகளில் சென்று நிலையை வந்தடைந்தது. விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நோ்த்திக் கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com