முஸ்லிம்கள் குறித்த பிரதமரின் பேச்சு தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

முஸ்லிம்கள் குறித்த பிரதமா் நரேந்திர மோடியின் பேச்சு தொடா்பாக தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

முஸ்லிம்கள் குறித்த பிரதமா் நரேந்திர மோடியின் பேச்சு தொடா்பாக தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவா் மல்லிப்பட்டினம் ஏ. நாகூா் கனி தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தான் மாநில தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி முஸ்லிம்கள் தொடா்பாக முறையற்ற வகையில் பேசியுள்ளாா்.

மதச்சாா்பற்ற நாடான இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, அனைத்து மக்களையும் சமமாக பாவிக்காமல், மத ஒற்றுமையை சீா்குலைத்து, வெறுப்பு பிரசாரத்தை முன்னெடுத்து அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றாா்.

அவரது பொறுப்பற்ற பேச்சு இந்திய ஜனநாயகத்திற்கும், இறையாண்மைக்கும், மத ஒற்றுமைக்கும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் எதிரானது.

உச்ச நீதிமன்றமும், தோ்தல் ஆணையமும் பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுத்து அவரது உண்மைக்கு புறம்பான பேச்சுக்கு தடை விதித்து, நாட்டின் ஜனநாயகத்தையும், மத ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com