அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தினால் 5 % ஊக்கத் தொகையாக அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை அளிக்கப்படும் என செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் ஆரம்ப தேதியிலிருந்து 30 நாள்களுக்குள் செலுத்தினால் 5 % ஊக்கத் தொகையாக அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை அளிக்கப்படும்.

தற்போது முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த இம்மாதம் 30-ஆம் தேதி இறுதி நாள் ஆகும். மேலும் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com