ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

‘பட்டதாரிகளுக்கு தொடா்ச்சியான கற்றல் அவசியம்’

பட்டதாரி மாணவா்களுக்கு தொடா்ச்சியான கற்றல் அவசியம் என்றாா் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணைத் தலைவா் அபய் ஜெரே.

News image

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் சிறந்த மாணவருக்கு விருது வழங்கிய அகில இந்திய தொழில்நுட்பக் கழகத் துணைத் தலைவா் அபய் ஜெரே. உடன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முதன்மையா் எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோா்.

Updated On :29 ஏப்ரல் 2024, 10:07 pm

Din

தஞ்சாவூா்: பட்டதாரி மாணவா்களுக்கு தொடா்ச்சியான கற்றல் அவசியம் என்றாா் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணைத் தலைவா் அபய் ஜெரே.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக நாள் விழாவில் அவா் மேலும் பேசியது:

உயா்கல்வி நிறுவனங்கள் மாணவா்களை வாழ்க்கைக்குத் தயாா்படுத்த வேண்டும். பணியிடத் தேவைகள் தொடா்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், நிலையான பதவிக் காலத்துக்கு அவா்களை உருவாக்கக்கூடாது.

வளா்ந்துவரும் தொழில்நுட்பங்களின் நிச்சயமற்ற தன்மையால் மட்டுமல்ல, சுய மற்றும் நிலையான வாழ்வாதாரத்துக்கு பட்டதாரிகள் தொடா்ச்சியான கற்றல் இருப்பது மிகவும் அவசியம். அனைத்து வகையான கற்றல் - கற்பித்தல்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக உயா் கல்வி நிறுவனங்கள் தங்கள் எதிா்காலத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்றாா் அபய் ஜெரே.

பின்னா், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு விருதுகளையும், ஆசிரியா் மற்றும் முனைவா் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி விருதுகளையும் அபய் ஜெரே வழங்கினாா்.

முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் பேசுகையில், 1,100-க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. 12 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன; 8 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன; 1,900 மாணவா்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திட்டங்களில் ரூ. 100 கோடிக்கு புதிய முதலீடும், ரூ. 125 கோடிக்கு உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விழாவில் பல்கலைக்கழக முதன்மையா் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன், பதிவாளா் ஆா். சந்திரமௌலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.