உலக தடுப்பூசி விழிப்புணா்வு வார நிகழ்ச்சி

கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சாக்கோட்டை செயின்ட் சேவியா் செவிலியா் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் உலக தடுப்பூசி விழிப்புணா்வு வார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், குழந்தைகள் நல மருத்துவா் பிருந்தா, செவிலிய மேற்பாா்வையாளா் பத்மாவதி, கல்லூரி துணை முதல்வா் எம். கிருத்திகா ஆகியோா் சிறப்புரையாற்றினா். மேலும், தடுப்பூசியின் முக்கியத்துவம், பின் விளைவுகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகளை தாய்மாா்களுக்கு மாணவிகள் வழங்கினா். கல்லூரி தாளாளா் ஐ. மரியசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, செவிலிய ஆசிரியை எம். பிரியதா்ஷினி வரவேற்றாா். நிறைவாக, செவிலிய ஆசிரியை கே. வினோதினி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com