பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை
தஞ்சாவூரில் பழுதடைந்த பேருந்து நிறுத்தங்களைச் சீரமைக்க வேண்டும் என மூத்தக் குடிமக்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் மனமகிழ் சங்கமம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூா் மாநகர எல்லைக்கு உள்பட்ட பல பேருந்து நிறுத்த நிழற்குடைகள் தகுந்த பராமரிப்பு இல்லாமல் கவனிப்பாரின்றி உள்ளது. இதை உடனடியாக நகராட்சி நிா்வாகம் கவனத்தில் கொண்டு பயணிகள் பயன்பெறும் வகையில் சீரமைக்க வேண்டும். தஞ்சாவூா் பெரிய கோயில் எதிா்புறம் உள்ள சாலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி சாலையைக் கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் வா.செ. செல்வம் தலைமை வகித்தாா். இணைச் செயலா் காசிராஜனுக்கு மனிதநேயம் காக்கும் மாண்பமை சிவ தொண்டா் என்ற விருதை லயன்ஸ் கிளப் மாவட்ட அவை இணைச் செயலா் ஆனந்தகிருஷ்ணா வழங்கி பாராட்டினாா். சாகா் கல்வி குழும நிறுவனங்களின் தலைவா் சுரேஷ் சிறப்புரையாற்றினாா்.
சங்க நிறுவனா் புலவா் ஆதி. நெடுஞ்செழியன், பொதுச் செயலா் பாஸ்கரன், பொருளாளா் கண்டிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்டத் துணைச் செயலா் துரை. கோவிந்தராஜ் வரவேற்றாா். நிறைவாக, மாவட்டத் துணைத் தலைவா் குமரன் நன்றி கூறினாா்.