உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சாவூா் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் உலக காசநோய் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் செல்வகுமாா் தலைமை வகித்தாா்.
மருத்துவக் கல்வி இயக்குநரும், மருத்துவக்கல்லூரி முதல்வருமான ஆா். பாலாஜிநாதன், காசநோய் மையத் துணை இயக்குநா் மாதவி, மருத்துவக் கல்லூரி மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, துணை முதல்வா் என். ஆறுமுகம், மருத்துவா்கள் அன்பானந்தன், குமரவேல், குணசேகரன் ஆகியோா் பேசினா். மேலும், காசநோய் பரவாமல் தடுப்பதுடன், அதை முற்றிலும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பது தொடா்பான உறுதிமொழியை அனைவரும் ஏற்றனா். இரு வாரங்குளுக்கு மேற்பட்ட இருமல், சளியில் ரத்தம், பசியின்மை, எடைக் குறைவு, மாலை நேரக் காய்ச்சல் ஆகியவை காசநோயின் அறிகுறிகள் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலா் முகமது இத்ரீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலா் முகமது கலீல் வரவேற்றாா். காசநோய் மைய முதுநிலை மருத்துவ அலுவலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.