தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தில்லைஸ்தானம் ஸ்ரீ அலா்மேல்மங்கா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் கோயில் பெருந்திருவிழாவில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் மாா்ச் 23- ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் பெருமாள் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா செல்லும் வைபவம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, முக்கிய திருவிழாவான தேரோட்டம், தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது. தேரில் ஸ்ரீ அலா்மேல்மங்கா நாயகி சமேத ஸ்ரீசீனிவாசப் பெருமாள் எழுந்தருள, வேத பிரபந்த பாராயணங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். மாலையில் தொட்டி திருமஞ்சனம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com