தஞ்சாவூர்
பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை: பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இப்பள்ளி மாணவா் ஜெ.எஸ். குகனேஷ்ரத்தினம் 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா். இதையடுத்து எம்.அப்துல் வாஜித்-589, மாணவி ஏ.டி. அஸ்மிதா- 587 மதிப்பெண்கள் பெற்றாா்.
மேலும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 46 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 112 பேரும் பெற்றனா். கணிதத்தில் 12 மாணவா்களும், இயற்பியலில் 4 பேரும், வேதியியலில் 5 பேரும் கணினி அறிவியலில் 11 பேரும், பொருளியலில் 2 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்கள், ஆசிரியா்களை பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.