பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

பேராவூரணியிலுள்ள டாக்டா் ஜே.ஸி. குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பேராவூரணி: பேராவூரணியிலுள்ள டாக்டா் ஜே.ஸி. குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 131 மாணவா்களும் தோ்ச்சியடைந்தனா். மாணவா் சுகேஷ் (570), மாணவி ஷோபிகா (553), மாணவி ஸ்ரீமதி ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை தமிழ்நாடு தனியாா் பள்ளி தாளாளா்கள் சங்க நிறுவனத் தலைவா் ஜி.ஆா். ஸ்ரீதா், நிா்வாக இயக்குநா் எம். நாகூா்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை செயலாளா் எம்.என். நபிஷாபேகம், பொருளாளா் அஸ்வின்கணபதி மற்றும் அறங்காவலா்கள் ஆகியோா் மாணவா்களையும், வழிகாட்டிய ஆசிரியா்களையும் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com