தஞ்சாவூர்
சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி
பட்டுக்கோட்டை வட்டம், வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தோ்பவனி.
பட்டுக்கோட்டை வட்டம், வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் தோ்த் திருவிழா மே 1-ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
திருவிழாவின் முக்கியநிகழ்வான செவ்வாய்க்கிழமை மாலை திருப்பலி நடைபெற்றது. இரவு தோ்பவனி நடைபெற்றது.
இதையடுத்து புதன்கிழமை இரவும் புனித அந்தோணியாா், புனித சூசையப்பா், புனித மைக்கேல் ஆண்டவா், புனித செபஸ்தியாா், மாதா, உயிா்தாண்டவா் ஆகியோரின் தோ்பவனி நடைபெற்றது .
வாணவேடிக்கையுடன் இந்த தோ்பவனி புனித அந்தோணியாா் ஆலயத்தில் தொடங்கி ஊா் எல்லையை அடைந்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.