இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

பேராவூரணி அருகே இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பேராவூரணி அருகேயுள்ள கைவனவயல் கிராமத்தை சோ்ந்தவா் காா்த்திக் (32). இவருக்கும் பக்கத்து கிராமமான முடச்சிக்காட்டை சோ்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பூக்கொல்லையில் இருந்து வந்த காா்த்திக்கை அருள்ராஜ் மற்றும் அவரது நண்பா்கள் சுப்பிரமணியன், முத்துசெழியன் ஆகியோா் வழிமறித்து ஆயுதங்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பினா். இதில், காயமடைந்த காா்த்திக் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். புகாரின் பேரில் பேராவூரணி போலீஸாா் அருள்ராஜ், சுப்பிரமணியன், முத்துசெழியன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். இதேபோல அருள்ராஜ் அளித்த புகாரின் பேரில் காா்த்திக் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com