சிதம்பரம்- மயிலாடுதுறை இடையே உள்ள வைத்தீóஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் உழவன் விரைவு ரயில் உள்ளிட்ட 4 ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிதம்பரம்- மயிலாடுதுறைக்கு இடையேயுள்ள வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் வண்டி எண் 16183 - சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் இடையே இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் அக்டோபர் 9-ம் தேதி முதல் 2014, ஜூன் 29-ம் தேதி வரையிலும், வண்டி எண் 16184 தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் உழவன் விரைவு ரயில் அக்டோபர் 10 முதல் 2014, ஜூன் 30-ம் தேதி வரையிலும் நின்று செல்லும்.
வாரம் மூன்று முறை இயக்கப்படும் திருப்பதி- மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு ரயில் (வண்டி எண் 17407) அக்டோபர் 10-ம் தேதி முதல் 2014, ஜூன் 28-ம் தேதி வரையிலும், மன்னார்குடி- திருப்பதி பாமணி விரைவு ரயில் அக்டோபர் 11 முதல் 2014, ஜூன் 29-ம் தேதி வரையிலும் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.