கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

திருச்சியில் டிச.29 இல் நாய்கள் கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் அரசு பொருள்காட்சியில் டிசம்பர் 29 ஆம் தேதி  பிற்பகல் 4 மணிக்கு நாய்கள் கண்காட்சி

Updated On :25 டிசம்பர் 2018, 9:51 am IST

திருச்சியில் நடைபெற்று வரும் அரசு பொருள்காட்சியில் டிசம்பர் 29 ஆம் தேதி  பிற்பகல் 4 மணிக்கு நாய்கள் கண்காட்சி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சியில்  பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் டிசம்பர் 29 ஆம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு திருச்சி மாநகர போலீஸார், ரயில்வே மற்றும் விமான நிலைய காவல்துறையினர் நாய்களைக் கொண்டு கீழ்படிதல், தீயிலிருந்து காப்பாற்றுதல், வெடிகுண்டு கண்டறிதல் போன்ற செயல்முறை விளக்கங்களையும் செய்து காட்டவுள்ளனர். மேலும் விபரங்களுக்கு கால்நடை மருத்துவர் மகேஷின் அலைபேசி 94438 36202 அல்லது 79049 37510 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக ஜன. 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.