மணப்பாறை வங்கியில் நடத்த திட்டமிட்ட கொள்ளைச் சம்பவம் தோல்வியில் முடிந்ததால், மன்னார்குடி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக கைதான வங்கி ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அசேசம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் மரியசெல்வம், மீரான் மொய்தீன், சுடலைமணி, முத்துக்குமார் ஆகியோர் மே 7ஆம் தேதி துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் ரொக்கம், 84 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் மரியசெல்வம் மணப்பாறையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக் கிளையில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மணப்பாறை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக் கிளை பதிவேடு அறைக்கு அருகில் இரண்டு துப்பாக்கிகள், திரவம், கிளிசரீன் பாட்டில் ஆகியவை கேரிப்பையில் வைக்கப்பட்டிருந்தது ஜூன் 30ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த மணப்பாறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சிறையில் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த ராமராஜன் மகன் மரியசெல்வத்தை(31) மணப்பாறை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், மணப்பாறை வங்கிக் கிளையில் கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும், ஆள்நடமாட்டம், பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் திட்டத்தை கைவிட்டதாகவும், பதிவேடு அறைக்கு அருகில் துப்பாக்கிகள் வைத்ததை எடுக்க மறந்து விட்டேன். இதையடுத்து, மன்னார்குடி வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து மரியசெல்வம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






