வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கர்நாடகத்தை நோக்கி நடைபயணம் செல்ல முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 152 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கர்நாடகத்துக்கு நடைபயணம் செல்ல முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 152 பேர் திருச்சியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :14 மே 2018, 10:33 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கர்நாடகத்துக்கு நடைபயணம் செல்ல முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 152 பேர் திருச்சியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மே 14-ஆம் தேதி, கர்நாடகம் வரையில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்திருந்தது. அதன்படி திங்கள்கிழமை காலை அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் திருச்சி தலைமை அஞ்சலகம் அருகே குவிந்தனர். தலைவர் ஷரீப் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதுடன் நடைபயணம் மேற்கொள்ள முயன்றனர். ஆனால், அதற்கு அனுமதியில்லை என போலீஸார் தெரிவித்து நடைபயணத்துக்கு தடைவிதித்தனர். இதனையடுத்து போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடையையும் மீறி நடைபயணம் மேற்கொள்ள முயன்றதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 97 மகளிர் உள்ளிட்ட 152 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.