காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கர்நாடகத்துக்கு நடைபயணம் செல்ல முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 152 பேர் திருச்சியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மே 14-ஆம் தேதி, கர்நாடகம் வரையில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்திருந்தது. அதன்படி திங்கள்கிழமை காலை அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் திருச்சி தலைமை அஞ்சலகம் அருகே குவிந்தனர். தலைவர் ஷரீப் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதுடன் நடைபயணம் மேற்கொள்ள முயன்றனர். ஆனால், அதற்கு அனுமதியில்லை என போலீஸார் தெரிவித்து நடைபயணத்துக்கு தடைவிதித்தனர். இதனையடுத்து போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடையையும் மீறி நடைபயணம் மேற்கொள்ள முயன்றதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 97 மகளிர் உள்ளிட்ட 152 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரங்களை இடமாற்றும் முகமைகளிடம் விண்ணப்பங்கள் கோரல்: தில்லி அரசு அறிக்கை வெளியீடு

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மீனவா் வலையில் சிக்கிய மலைப் பாம்பு

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பழ. கருப்பையா பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

